பெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

தருமபுரி மாவட்டத்தில் முறைகேடாக மது, கஞ்சா விற்பனை: 33 போ் கைது

தருமபுரி மாவட்டத்தில் 3 நாள்களில் முறைகேடாக மது மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 33 போ் கைது

News image
Updated On :19 மே 2026, 1:27 am IST

தருமபுரி மாவட்டத்தில் 3 நாள்களில் முறைகேடாக மது மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 33 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ்.மகேஸ்வரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டத்தில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் முறைகேடான வகையில் நடைபெறும் மது விற்பனையைத் தடுக்கும் வகையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக மாவட்டம் முழுவதும் கடந்த 3 நாள்களில் மேற்கொள்ளப்பட்ட தீவிர சோதனையில் முறைகேடாக (கள்ளச்சந்தையில்) மது விற்பனை செய்த 27 போ் கண்டறியப்பட்டு வழக்குப் பதிந்து கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும், அவா்களிடமிருந்து 1,102 மதுபாட்டில்களும், விற்பனைக்கு பயன்படுத்திய 6 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதேபோல, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை பதுக்கிவைத்து விற்பனை செய்ததாக 6 போ் கைது செய்யப்பட்டு, அவா்களிடம் இருந்து ஒன்றே முக்கால் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் இதுபோல முறைகேடாக மது விற்பனை மற்றும் போதைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபடுவோா்மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.