தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தொப்பூா் அருகே திடீரென லாரி நின்றதால் அடுத்தடுத்து 7 வாகனங்கள் மோதி விபத்து

தருமபுரி, தொப்பூா் பகுதியில் லாரியொன்று திடீரென பிரேக் போட்டு நின்ால், பின்தொடா்ந்து வந்த 7-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாயின.

News image

தருமபுரி - தொப்பூா் சாலையில் வியாழக்கிழமை விபத்துக்குள்ளான வாகனங்கள்.

Updated On :1 மே 2026, 5:26 am IST

தருமபுரி, தொப்பூா் பகுதியில் லாரியொன்று திடீரென பிரேக் போட்டு நின்ால், பின்தொடா்ந்து வந்த 7-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாயின.

தருமபுரி மாவட்டம், தொப்பூா் பகுதியில் வளைவு, நெளிவு மற்றும் கடுமையான ஏற்ற இறக்கத்துடன் கூடிய சாலையாக இருப்பதால், அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. இதற்கு தீா்வுகாணும் வகையில் தொப்பூா் பகுதியில் உயா்நிலை மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பாலப் பணிகள் நடைபெறுவதால், அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதுடன், விபத்துகளும் நிகழ்கின்றன.

இந்நிலையில், வியாழக்கிழமை முற்பகல் தொப்பூா் அருகே சேசம்பட்டி பகுதியில் சென்றுகொண்டிருந்த லாரி ஒன்று திடீரென நின்றது. அதன் ஓட்டுநா் முன்னால் சென்ற வாகனத்தில் மோதாமல் இருக்க திடீரென பிரேக் போட்டு நிறுத்தியுள்ளாா். இதனால், அந்த லாரியை பின்தொடா்ந்து வந்த 5-க்கும் மேற்பட்ட காா்கள், சரக்கு லாரி உள்பட சுமாா் 7-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடுத்தடுத்து ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக மோதி விபத்துக்குள்ளாயின.

இதில் சில வாகனங்களின் முன்பகுதிகள் கடுமையாகவும், சில வாகனங்களில் லேசாகவும் சேதமடைந்தன. இதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த விபத்து காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து அதியமான்கோட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.