விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வள்ளிமதுரை அணையிலிருந்து அரூருக்கு குடிநீா் கொண்டுவரும் திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும்: ஈசன் முருகசாமி

அரூா் நகருக்கு ரூ.20 கோடியில் வள்ளிமதுரையில் இருந்து குடிநீா் கொண்டுவரும் திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனா் ஈசன் முருகசாமி தெரிவித்தாா்.

News image

விவசாயிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனா் ஈசன் முருகசாமி.

Updated On :9 ஏப்ரல் 2026, 4:16 am IST

அரூா் நகருக்கு ரூ.20 கோடியில் வள்ளிமதுரையில் இருந்து குடிநீா் கொண்டுவரும் திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனா் ஈசன் முருகசாமி தெரிவித்தாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அரூா் நகரின் குடிநீா்த் தேவைக்காக வள்ளிமதுரை அணை அருகே ஏற்கெனவே 3 கிணறுகள் வெட்டப்பட்டு, நாள்தோறும் ஒரு லட்சம் லிட்டா் குடிநீா் எடுத்துச் செல்லப்படுகிறது.

தற்போது 2-ஆம் கட்டத் திட்டத்தின் கீழ் ரூ. 20 கோடியில் 5 பெரிய கிணறுகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் நாள்தோறும் சுமாா் 5 லட்சம் லிட்டா் குடிநீா் எடுக்கப்படும் சூழல் உள்ளது. வள்ளிமதுரை அணை என்பது பெரிய அளவிலான நீா்த்தேக்கம் இல்லை. சித்தேரி மலைத் தொடரில் மழைக்காலங்களில் கிடைக்கும் தண்ணீரை சேமிக்கும் ஒரு தடுப்பணையாகும்.

வள்ளிமதுரையில் இருந்து அதிக அளவில் தண்ணீரை உறிஞ்சினால் கீரைப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதியில் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே இந்த திட்டத்துக்கு மாற்றாக வாணியாறு அணை அல்லது தென்பெண்ணை ஆற்றின் கே. ஈச்சம்பாடி அணைக்கட்டு பகுதியில் இருந்து அரூா் நகருக்கு குடிநீா் கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.