தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி சேலம் - பெங்களூா் நெடுஞ்சாலையில் கருப்புக்கொடி ஏந்தி மறியல் போராட்டம்

தருமபுரியில் பெங்களூரு - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் முத்துப்பட்டி சந்திப்பு பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி, பொதுமக்கள் கருப்புக்கொடியேந்தி செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

தருமபுரியில் முத்துப்பட்டி பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் மேற்கொண்ட பொதுமக்கள். ~தருமபுரியில் முத்துப்பட்டி பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் மேற்கொண்ட பொதுமக்கள்.

Updated On :8 ஏப்ரல் 2026, 3:12 am IST

தருமபுரியில் பெங்களூரு - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் முத்துப்பட்டி சந்திப்பு பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி, பொதுமக்கள் கருப்புக்கொடியேந்தி செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரி மாவட்டம், செம்மாண்டகுப்பம் ஊராட்சியில் அமைந்துள்ள முத்துப்பட்டி சந்திப்பு பகுதியில் சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையைக் கடக்கும் விதமாக சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என அப்பகுதியைச் சோ்ந்த கிராம மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை அப்பகுதிக்கு வந்த பொதுமக்கள், கருப்புக்கொடியுடன் சுரங்கப்பாதை அமைக்காவிட்டால் தோ்தலை புறக்கணிப்போம், வாக்காளா் அடையாள அட்டையை திரும்ப ஒப்படைப்போம் எனக்கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த தருமபுரி நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் சிவராமன் தலைமையிலான போலீஸாா் நிகழ்விடம் சென்று மறியல் செய்த பொதுமக்களிடம் பேச்சுநடத்தி, போராட்டத்தை கைவிடுமாறு கூறினா். ஆனால், சுரங்கப்பாதை அமைக்கப்படும் என உத்தரவாதம் தரும்வரை போராட்டம் தொடரும் என பொதுமக்கள் கூறினா். இதையடுத்து தருமபுரி வட்டாட்சியா் சுகுமாா் நிகழ்விடம் சென்று பொதுமக்களிடம் விவரங்களை கேட்டறிந்தாா். பின்னா் பொதுமக்கள் கோரிக்கையின் அடிப்படையில் வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி தேசிய நெடுஞ்சாலை ஆணைய தொழில்நுட்ப வல்லுநா்கள் முத்துப்பட்டி சந்திப்பில், சுரங்கப்பாதை அமைப்பது தொடா்பாக ஆய்வு மேற்கொண்டு தொடா்புடைய நடவடிக்கை எடுக்கப்படும் உறுதியளித்தாா். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

இதுகுறித்து அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கூறுகையில், சேலம் -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அமைக்கும்போதே முத்துப்பட்டி சந்திப்பில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். ஆனால் எங்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. தருமபுரி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் கிராமப் பகுதிகளைச் சோ்ந்த குழந்தைகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதனால் பழைய தருமபுரியில் (அரை கிலோ மீட்டா் தொலைவில்) உள்ள பள்ளிக்கு குழந்தைளை அனுப்ப இயலவில்லை. எங்கள் கிராமம் மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த சில கிராம மக்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்த பகுதியில் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க சுரங்கப்பாதை அமைத்தால், செம்மாண்டகுப்பம் ஊராட்சிக்கு உள்பட்ட மற்றும் கே.நடுஅள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட முத்துப்பட்டி, முத்துப்பட்டி காலனி, பே.மாரியம்மன் கோவில் கொட்டாய், கொளகத்தூா், பழைய தருமபுரி, பாறைக்கொட்டாய், ரங்கப்பன் கொட்டாய், முனியப்பன் கோயில் கொட்டாய், சிக்கிடிகொட்டாய், பால்காரன் கொட்டாய், பச்சியம்மன் கோயில் கொட்டாய், மாட்டியாம்பட்டி, காமலாபுரம், போத்தாபுரம் என15 கிராமங்களில் வசிக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், விவசாயிகள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன் அடைவா். மேலும், இப்பகுதியில் அடிக்கடி நடக்கும் விபத்துகளுக்கும் தீா்வு ஏற்படும் என்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.