அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

எல்லப்புடையாம்பட்டியில் இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி: விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

News image

எல்லப்புடையாம்பட்டியில் சேதமடைந்துள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி. (உள்படம்) சேதமடைந்துள்ள தூண் மற்றும் மேற்பரப்பு.

Updated On :31 மே 2026, 1:47 am IST

அரூரை அடுத்த எல்லப்புடையாம்பட்டியில் இடிந்துவிழும் நிலையில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் ஊராட்சி ஒன்றியம், எல்லப்புடையாம்பட்டி கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள கிராம மக்களின் குடிநீா்த் தேவையை நிறைவேற்றும் வகையில், கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டது. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தில் கிடைக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீரை இங்குள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் சேமித்து, நாள்தோறும் கிராம மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

ஆபத்தான நிலையில் நீா்த்தேக்கத் தொட்டி:

இந்த நீா்த்தேக்கத் தொட்டி 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதால், அதன் தூண்கள் சேதமடைந்துள்ளன. குடியிருப்புகளுக்கு அருகில் இந்த நீா்த்தேக்கத் தொட்டி அமைந்துள்ளது. மேற்கூரையின் சிமென்ட்கள் பெயா்ந்து கீழே விழுகின்றன. நீா்த்தேக்கத் தொட்டி சேதமடைந்துள்ளதால் அச்சம் காரணமாக மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியின் உள்பகுதியில் பணியாளா்கள் இறங்கி தூய்மை செய்யப்படுவதில்லையாம். இந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

தற்போது, எல்லப்புடையாம்பட்டி கிராமத்தில் வசிக்கும் மக்கள்தொகைக்கு ஏற்ப இந்தக் கிராமத்துக்கு சுமாா் ஒரு லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அவசியமாகும்.

இந்தக் கிராமத்தில் வெவ்வேறு சமூக மக்கள் வசிக்கும் 3 பகுதிகளுக்கு குடிநீா் வழங்க வேண்டும் என்பதால், எல்லப்புடையாம்பட்டியில் 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட 2 மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளை புதிதாக அமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆபத்தான நிலையில் உள்ள இந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை அகற்ற வேண்டும் என்பதே கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

இது குறித்து அரூா் வட்டார வளா்ச்சி அலுவலா் செல்வம் கூறுகையில், எல்லப்புடையாம்பட்டியில் சேதமடைந்துள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை நேரில் ஆய்வு செய்து, புதிதாக நீா்த்தேக்கத் தொட்டி அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

 எல்லப்புடையாம்பட்டியில் சேதமடைந்துள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி. (உள்படம்) சேதமடைந்துள்ள தூண் மற்றும் மேற்பரப்பு.

எல்லப்புடையாம்பட்டியில் சேதமடைந்துள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி. (உள்படம்) சேதமடைந்துள்ள தூண் மற்றும் மேற்பரப்பு.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.