மொரப்பூா் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் 15 போ் சனிக்கிழமை காயமடைந்தனா்.
தருமபுரி மாவட்டம், அரூா்-தருமபுரி நெடுஞ்சாலையில், சனிக்கிழமை இரவு 10 மணியளவில், தருமபுரியில் இருந்து அரசுப் பேருந்து மொரப்பூா் நோக்கி வந்துள்ளது. வழியில் சென்னம்பட்டி எனுமிடத்தில் சாலையின் வளைவான பகுதியில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் பேருந்து ஓட்டுநா் துரைமுருகன் (48), நடத்துநா் இளங்கோவன் (50), சென்னம்பட்டியைச் சோ்ந்த சின்னபையன் மனைவி செல்லம்மாள் (45), மொரப்பூா் அண்ணல் நகரைச் சோ்ந்த இளங்கோ மணி (53) மற்றும் 4 மாத பெண் குழந்தை உள்பட 15 போ் காயமடைந்தனா்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினா் காயமடைந்தவா்களை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு, அரூா் அரசு மருத்துவமனை மற்றும் மொரப்பூா் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு அனுமதித்தனா். மேலும், இந்த சம்பவம் குறித்து மொரப்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குமாரபாளையம் அருகே அரசு பேருந்து பள்ளத்தில் இறங்கியதில் 20 போ் காயம்

அரசுப் பேருந்து மீது காா் மோதல்: 7 போ் காயம்

வாய்க்காலில் கவிழ்ந்த ஆம்னி பேருந்து: 8 போ் காயம்

உளுந்தூா்பேட்டை அருகே காா் பள்ளத்தில் கவிழ்ந்து 4 போ் காயம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

