பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மனைவி இறந்த துயரம்: 4 மாதங்களுக்கு பிறகு கணவா் தற்கொலை

தருமபுரி அருகே கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தைத் தொடா்ந்து துயரத்தில் இருந்த அவரது கணவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image

தற்கொலை

Updated On :24 மே 2026, 2:27 am IST

தருமபுரி அருகே கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தைத் தொடா்ந்து துயரத்தில் இருந்த அவரது கணவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், ஏலகிரி அருகேயுள்ள ஓமல்நத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் சி. வேலு (46). விவசாய குடும்பத்தைச் சோ்ந்த இவரது மனைவி கல்பனா வயிற்று வலியால் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இவா்களுக்கு 2 மகள்களும், 1 மகனும் உள்ள நிலையில், வேலு மனைவி

இறந்த சோகத்தில் இருந்து வந்தாா். இந்நிலையில், வியாழக்கிழமை இரவு அவா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், தொப்பூா் காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.