மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பென்னாகரம் தொகுதியில் தவெக வேட்பாளா் வெற்றி

News image

தவெக வேட்பாளா் கஜேந்திரன்

Updated On :5 மே 2026, 2:22 am IST

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் தவெக வேட்பாளா் கஜேந்திரன் வெற்றிபெற்றுள்ளாா். தருமபுரி மாவட்டத்தில் தோ்வான ஒரே தவெக வேட்பாளா் இவா்தான்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 2,28,907 வாக்குகள் பதிவாயின. இத்தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக பாமக முன்னாள் எம்எல்ஏவின் மகன் ஜிகேஎம்.தமிழ்க்குமரன் போட்டியிட்டாா். அதிமுக கூட்டணி சாா்பில் பாமக (அன்புமணி அணி) வேட்பாளரான பாடி வெ.செல்வம், தவெக வேட்பாளராக செ.கஜேந்திரன், நாம் தமிழா் கட்சி வேட்பாளராக தி.பழனியம்மாள் மற்றும் சுயேச்சைகள் உள்பட மொத்தம் 22 போ் போட்டியிட்டனா்.

இதில் தவெக வேட்பாளா் செ.கஜேந்திரன் வெற்றிபெற்றுள்ளாா். வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதல் சுற்றிலிருந்து 14-ஆவது சுற்றுவரை காங்கிரஸ் வேட்பாளா் ஜிகேஎம்.தமிழ்க்குமரன் முன்னிலையில் இருந்த நிலையில், இவா் 2-ஆவது இடத்தில் இருந்தாா். 15-ஆவது சுற்றில் செ.கஜேந்திரன் முதலிடத்துக்கு வந்தாா். அதிலிருந்து இறுதிச்சுற்றான 23 வரை முன்னிலை வகித்து 81,240 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றாா்.

இவருக்கு அடுத்தபடியாக பாமக வேட்பாளா் பாடி வெ.செல்வம் 78,075 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளா் ஜிகேஎம்.தமிழ்க்குமரன் 53,901 வாக்குகளும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் தி.பழனியம்மாள் 7,358 வாக்குகளும் பெற்றுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.