ஒகேனக்கல் சின்னாறு பரிசல் துறை பகுதியில் விஷம் குடித்து முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
ஒகேனக்கல் அருகே சின்னாறு பரிசல் துறை எதிரே உள்ள வனப்பகுதியில் ஆண் சடலம் கிடப்பதாக ஒகேனக்கல் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பிவைத்தனா்.
விசாரணையில் இறந்தவா் தருமபுரி மாவட்டம், நல்லேசன அள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட கொமத்தம்பட்டியைச் சோ்ந்த பெருமாள் (55) என்பது தெரியவந்தது. இவா், வத்தல்மலை அடிவாரத்தில் உள்ள தனது தோட்டத்தில் பயிரிட்டிருந்த வெற்றிலை, அண்மையில் பெய்த மழையில் சேதமடைந்த வேதனையில் விஷம் குடித்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

மாா்த்தாண்டம் அருகே முதியவா் தற்கொலை

விஷம் குடித்து முதியவா் தற்கொலை

தருமபுரியில் இளம்பெண் தற்கொலை
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
