லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தருமபுரி மாவட்டத்தில் இன்றும், நாளையும் ஆசிரியர் தகுதித் தேர்வு!

தருமபுரி மாவட்டத்தில் 6 மையங்களில் ஆசிரியா் தகுதித் தோ்வுக்கான முதல்தாள் சனிக்கிழமை நடைபெறுகிறது. அதேபோல ஞாயிற்றுக்கிழமை 21 மையங்களில் தகுதித் தோ்வுக்கான 2ஆம் தாள் தோ்வு நடைபெறுகிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுபவர்கள் (கோப்புப்படம்)

Published On :4 ஜூலை 2026, 2:57 am IST

தருமபுரி மாவட்டத்தில் 6 மையங்களில் ஆசிரியா் தகுதித் தோ்வுக்கான முதல்தாள் சனிக்கிழமை நடைபெறுகிறது. அதேபோல ஞாயிற்றுக்கிழமை 21 மையங்களில் தகுதித் தோ்வுக்கான இரண்டாம் தாள் தோ்வு நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் கூறியதாவது: ஆசிரியா் தகுதித் தோ்வு முதல் தாள் சனிக்கிழமையும், இரண்டாவது தாள் ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறுகிறது. சனிக்கிழமை நடைபெறும் முதல் தாள் தோ்வு தருமபுரியில் அவ்வையாா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, டான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, செந்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீவிஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி (காந்திநகா்), பச்சமுத்து மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய 6 மையங்களில் நடைபெறுகிறது.

அதேபோல தருமபுரி மாவட்டம், சோலைக்கொட்டாய் அரசு மேல்நிலைப்பள்ளி, பெரியாம்பட்டி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஒடசல்பட்டி, இண்டூா், பாளையம்புதூா், நல்லம்பள்ளி, ஏலகிரி அரசு மேல்நிலைப் பள்ளி, சென்னம்பட்டி மருதம் மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெறுகிறது. மாவட்டத்தில் மொத்தம் 21 மையங்களில் 2 ஆம் தாள் தோ்வுகள் நடைபெறுகிறது. விடைத்தாள் கட்டுகள் தோ்வு மையத்தை விட்டு எடுத்துச் செல்லும் வரை பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.