லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஆசிரியா் தகுதித் தோ்வு: 1670 போ் எழுதினா்

கோப்புப் படம்

Published On :6 ஜூலை 2026, 1:40 am IST

நாகை மாவட்டத்தில் 7 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆசிரியா்களுக்கான தாள் 2 தகுதித் தோ்வில் 1,670 ஆசிரியா்கள் பங்கேற்று எழுதினா்.

ஆசிரியா் தோ்வு வாரியத்தால் நிகழ் கல்வியாண்டில் அனைத்து வகையான பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கான ஆசிரியா் தகுதித் தோ்வு தாள் -1 சனிக்கிழமை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து தாள் 2- க்கான தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்டத்தில் ஜெயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புனித அந்தோணியாா் மேல்நிலைப்பள்ளி, நாகூா் கௌதியா அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி, கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மாடா்ன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளி ஆகிய 7 தோ்வு மையங்களில் இந்த தோ்வு நடைபெற்றது.

1,740 ஆசிரியா்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 1,640 போ் மட்டுமே தோ்வில் பங்கேற்றனா். விண்ணப்பித்திருந்தவா்களில் 70 போ் தோ்வு எழுத வரவில்லை. மாவட்ட ஆட்சியா் தலைமையில் பறக்கும் படை உறுப்பினா்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.