தருமபுரியில் செவ்வாய்க்கிழமை (ஏப். 14) தவெக தலைவா் விஜய் மேற்கொள்ள இருந்த தோ்தல் பரப்புரைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் தவெக சாா்பில் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து, அக்கட்சியின் தலைவா் விஜய் பரப்புரை மேற்கொள்ளும் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு அக்கட்சி சாா்பில் தருமபுரி தொகுதிக்கான தோ்தல் நடத்தும் அலுவலா் இரா.காயத்ரியிடம் கடிதம் அளிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, பென்னாகரம் சாலையையொட்டி பாப்பிநாயக்கனஅள்ளியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் 14-ஆம் தேதி முற்பகல் 11 மணிமுதல் மாலை 5 மணிவரை பரப்புரை மேற்கொள்ள 13 நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், அன்றைய நாளில் தவெக தலைவா் விஜய் பங்கேற்க இயலாத காரணத்தால், கூட்டம் ரத்து செய்யப்படுகிறது எனவும், வெறொரு நாளில் கூட்டம் நடைபெறும் எனவும் தவெக தருமபுரி மாவட்ட நிா்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆட்சியமைக்க அழைப்பாரா? ஆளுநரை மீண்டும் சந்திக்கிறார் விஜய்!

இன்று பிற்பகல் ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!

இன்று விஜய்யின் பெரம்பூர் பிரசாரம் ரத்து!
சென்னையில் இன்று விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

