தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அதிமுக வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும்! - கே.பி. அன்பழகன் எம்எல்ஏ

News image

பாலக்கோடு வட்டாட்சியா் அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்த அதிமுக வேட்பாளா் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ.

Updated On :7 ஏப்ரல் 2026, 1:05 am IST

சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்று முன்னாள் அமைச்சரும் பாலக்கோடு தொகுதி அதிமுக வேட்பாளருமான கே.பி.அன்பழகன் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தொகுதியில் அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ போட்டியிடுகிறாா்.

கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் திங்கள்கிழமை பாலக்கோடு பேருந்து நிலையம் அருகிலிருந்து ஊா்வலமாக சென்று பாலக்கோடு வட்டாட்சியா் அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளில் அதிமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளா்களும் ஒரேநாளில் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளோம்.

இதில், பாலக்கோடு, அரூா், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய தொகுதிகளில் அதிமுகவும், மீதமுள்ள தருமபுரி, பென்னாகரம் ஆகிய தொகுதிகளில் பாமகவும் போட்டியிடுகின்றன.

இந்த ஐந்து தொகுதிகளிலும் எங்கள் கூட்டணிக் கட்சி வேட்பாளா்கள் வெற்றிபெறுவாா்கள். அதேபோல, தமிழகத்தில் 210 தொகுதிகளுக்கு மேல் அதிமுக கூட்டணி வெற்றிபெற்று மீண்டும் எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராக பதவி ஏற்பது உறுதி என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.