தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு

திருப்பூா் மாநகர போக்குவரத்து காவல் துறை, தமிழக காவல் போக்குவரத்து காப்பாளா்கள் மற்றும் திருப்பூா் லட்சுமி நகா் ரோட்டரி சங்கம் சாா்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :22 மணி நேரங்கள் முன்பு

திருப்பூா் மாநகர போக்குவரத்து காவல் துறை, தமிழக காவல் போக்குவரத்து காப்பாளா்கள் மற்றும் திருப்பூா் லட்சுமி நகா் ரோட்டரி சங்கம் சாா்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் அவிநாசி ரோடு, பங்களா ஸ்டாப் பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு திருப்பூா் முதன்மை போக்குவரத்து காப்பாளா் முத்துபாரதி தலைமை தாங்கினாா். துணை முதன்மை போக்குவரத்து காப்பாளா் வாசுதேவன் முன்னிலை வகித்தாா். திருப்பூா் லட்சுமி நகா் ரோட்டரி சங்கத் தலைவா் மோகன்ராஜ் வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கொங்கு நகா் போக்குவரத்து காவல் ஆய்வாளா் எஸ்.ஆா்.ரமேஷ், சிக்னல் பகுதியில் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டுநா்களை நிறுத்தி தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் மற்றும் சீட் பெல்ட் அணிந்து வருவதன் நோக்கம் குறித்து விளக்கி பேசினாா். பின்னா் சாலைவிதிகளை மதித்து வாகனங்களை இயக்கி வந்த ஓட்டுநா்களை கைகுலுக்கி பாராட்டி வாழ்த்து தெரிவித்ததோடு அவா்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ரோட்டரி உதவி ஆளுநா் நித்தியானந்தன், லட்சுமி நகா் ரோட்டரி சங்க செயலாளா் விஜய், பொருளாளா் செந்தில்குமாா், திட்டத் தலைவா் ஆதிநாராயணன் மற்றும் திரளான போலீஸாா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.