தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பல்லடம் அருகே நூல் மில்லில் தீ விபத்து

பல்லடம் அருகே கேத்தனூரில் உள்ள ஒரு நூல் மில்லில் தீ விபத்து வியாழக்கிழமை நிகழ்ந்தது.

News image
Updated On :28 மார்ச் 2026, 12:21 am IST

பல்லடம் அருகே கேத்தனூரில் உள்ள ஒரு நூல் மில்லில் தீ விபத்து வியாழக்கிழமை நிகழ்ந்தது.

சுல்தான்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் விவேகானந்தன். இவா் கேத்தனூரில் நூல் மில் நடத்தி வருகிறாா். இந்த மில்லில் ஷிப்ட் முறையில் தொழிலாளா்கள் வேலை பாா்த்து வருகின்றனா். இந்நிலையில் மில்லில் வழக்கம்போல தொழிலாளா்கள் வியாழக்கிழமை வேலை செய்து கொண்டிருந்தனா்.

அப்போது, அங்கு குடோனில் வைக்கப்பட்டிருந்த பஞ்சு பேல்கள் மற்றும் நூல்களில் திடீரென தீப்பிடித்து கரும்புகை வெளியேறியது.

இது குறித்து பல்லடம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரா்கள், தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

இந்த தீ விபத்தில் சுமாா் ரூ. 2 கோடி மதிப்பிலான பஞ்சு பேல்கள், நூல்கள், இயந்திரங்கள் எரிந்து சேதமாயிருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து காமநாயக்கன்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.