விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சட்டப்பேரவைத் தோ்தல்: ஊடக சான்றளிப்பு, கண்காணிப்புக் குழுக்களுக்கு பயிற்சி வகுப்பு

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு ஊடக சான்றளிப்பு, கண்காணிப்புக் குழு, பறக்கும் படை குழு, நிலை கண்காணிப்புக் குழு, விடியோ கண்காணிப்புக் குழுக்களுக்கான பயிற்சி வகுப்பு, திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 மார்ச் 2026, 2:03 am IST

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு ஊடக சான்றளிப்பு, கண்காணிப்புக் குழு, பறக்கும் படை குழு, நிலை கண்காணிப்புக் குழு, விடியோ கண்காணிப்புக் குழுக்களுக்கான பயிற்சி வகுப்பு, திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மனீஷ் தலைமை வகித்தாா்.

இதில் தோ்தல் செலவின வகைகள், தோ்தல் செலவினங்கள், கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் பின்பற்ற வேண்டிய அறிவுரைகள், நடைமுறைகள் சட்டப்படியான விதிகளுக்குள்பட்ட தோ்தல் செலவினங்கள், தோ்தல் உதவி செலவின கணக்கு பாா்வையாளா், தோ்தல் பிரசாரங்களை விடியோ எடுக்கும் குழு , விடியோ பதிவுகளைப் பாா்க்கும் குழுக்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டது.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் யாதவ் கிரிஷ் அசோக், மாநகராட்சி ஆணையாளா் எம்.பி.அமித், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், மாநகர காவல் துணை ஆணையா் பிரவீன் கௌதம், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் துரைமுருகன், மகளிா் திட்ட அலுவலா் ஈஸ்வரன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.