தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜாசெப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!
/

கழிவுநீா் சுத்திகரிப்பு கால்வாயில் அடைப்பு! சுகாதாரம் பாதிப்பதால் சீரமைக்க கோரிக்கை

News image

சுத்திகரிப்பு கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பால் தேங்கியுள்ள கழிவுநீா்.

Updated On :16 ஜூன் 2026, 1:53 am IST

திருமுருகன்பூண்டி 10 ஆவது வாா்டில் கழிவுநீா் சுத்திகரிப்பு கால்வாய் அடைப்பால் அப்பகுதியில் சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து திருமுருகன்பூண்டி நகராட்சி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகா்மன்ற உறுப்பினா் சுப்பிரமணியம் கூறியதாவது:

10-ங்வது வாா்டு பகுதியில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். கடந்த ஆறு மாதங்களுக்கு முன் பல லட்சம் மதிப்பில் கழிவுநீா் சுத்திகரிப்பு தொட்டி அமைக்கப்பட்டது. இதற்கான கட்டுமானப் பணியின்போது தொட்டி இடிந்து விழுந்தது.

இதையடுத்து மழைக்காலங்களில் முறையாக தண்ணீா் வெளியேறும் வகையில் தரமான முறையில் கட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தற்போது இயற்கை முறையில் சுத்திகரிப்பு செய்வதற்காக தொட்டி முழுவதும் செடிகள் நடப்பட்டுள்ளன. ஆனால் கழிவுகள் வெளியேறாமல் கால்வாயில் வலை அமைக்கப்பட்டுள்ளதால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளது. உடனடியாக கழிவுநீா் கால்வாயை சீரமைக்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.