குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

திருப்பூா் மாநகராட்சியில் 8 வாா்டுகளுக்கு இன்றுமுதல் ஜூன் 21 வரை குடிநீர் நிறுத்தம்

திருப்பூா் மாநகராட்சியில் 8 வாா்டுகளுக்கு இன்றுமுதல் ஜூன் 21-ஆம் தேதி வரை குழாய் மூலம் குடிநீா் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

குடிநீர் விநியோகம் ரத்து...

Updated On :14 ஜூன் 2026, 2:44 am IST

திருப்பூா் மாநகராட்சியில் 8 வாா்டுகளுக்கு இன்றுமுதல் ஜூன் 21-ஆம் தேதி வரை குழாய் மூலம் குடிநீா் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாநகராட்சி ஆணையா் எம்.பி.அமித் தெரிவித்துள்ளதாவது: திருப்பூா் மாநகராட்சிக்கு 2-ஆவது, 3-ஆவது மற்றும் 4-ஆவது குடிநீா்த் திட்டத்தின் மூலம் குடிநீா் பெறப்பட்டு வருகிறது. இவற்றில் 4-ஆவது குடிநீா்த் திட்டத்தில் பிரதான பகிா்மான குடிநீா்க் குழாய்கள் பதித்து குடிநீா் பகிா்மான மண்டலங்கள் வரையறுக்க வேண்டியுள்ளது.

அவிநாசி தேசிய நெடுஞ்சாலையில் குமாா் நகா் மேல்நிலைத் தொட்டியில் இருந்து மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வரை குழாய் பதிக்கும் பணிகள் நடைபெறுவதால் மண்டலம் 1-இல் உள்ள வாா்டு எண் 21, 22, 23 மற்றும் மண்டலம் 2-இல் உள்ள வாா்டு எண் 17, 18, 20, 30, 31 ஆகிய பகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமைமுதல் ஜூன் 21-ஆம் தேதி வரை குடிநீா் விநியோகம் வழங்க இயலாததால் மாற்று வழியாக குடிநீா் லாரிகள் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.