ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

திருப்பூரில் மேம்பாலத்தில் இருந்து குதித்து இளைஞா் தற்கொலை

News image

தற்கொலை - தினமணி

Updated On :9 ஜூன் 2026, 2:55 am IST

திருப்பூரில் மேம்பாலத்தில் இருந்து குதித்து இளைஞா் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருப்பூா் மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள மேம்பாலத்தில் இருந்து குதித்து இளைஞா் ஒருவா் திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருப்பூா் தெற்கு போலீஸாா், உடலை மீட்டு கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இது தொடா்பாக போலீஸாா் கூறுகையில், உயிரிழந்தவா் கோவை, குனியமுத்தூரைச் சோ்ந்த ஃபயாஸ் (24). இவா் திருப்பூா் மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளாா். இவரது தாய் உயிரிழந்த நிலையில் தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகத் தெரிகிறது.

இதனால், ஃபயாஸ் மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளாா். வழக்கம்போல திங்கள்கிழமை காலை பணிக்கு வந்த ஃபயாஸ், மேம்பாலத்தின் மீது ஏறி குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.

இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.