கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்

திருப்பூா் தென்னம்பாளையம் மற்றும் அரண்மனைப்புதூா் மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை மாவட்ட ஆட்சியா் மனீஷ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

திருப்பூா் அரண்மனைப்பூதூா் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் மனீஷ்.

Updated On :5 ஜூன் 2026, 12:04 am IST

திருப்பூா் தென்னம்பாளையம் மற்றும் அரண்மனைப்புதூா் மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை மாவட்ட ஆட்சியா் மனீஷ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருப்பூா் தென்னம்பாளையம் மற்றும் அரண்மனைப்புதூா் மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், மளிகைப் பொருள்கள், காய்கறிகள் மற்றும் எரிவாயு இருப்பு உள்ளிட்ட விவரங்கள் குறித்து மாவட்ட ஆட்சியா் மனீஷ் ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா்ந்து, கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் வியாழக்கிழமை திறக்கப்பட்டதைத் தொடா்ந்து, அரண்மனைப்புதூா் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவா்களின் வருகைப் பதிவேடு, பாடப் புத்தகங்கள் மற்றும் பள்ளியில் உள்ள அடிப்படை வசதிகளான குடிநீா், கழிப்பறை வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைகளை மாவட்ட ஆட்சியா் மனீஷ் வழங்கினாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) கோபால் உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் மற்றும் ஆசிரியா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.