பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு: கடைகளுக்கு அபராதம்

திருப்பூா் மாநகராட்சிப் பகுதியில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதோடு, 60 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.

News image

பணம் - பிரதிப் படம்

Updated On :4 ஜூன் 2026, 3:00 am IST

திருப்பூா் மாநகராட்சிப் பகுதியில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதோடு, 60 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பூா் மாநகராட்சி முதல் மண்டலம், 24-ஆவது வாா்டு சாமுண்டிபுரம் பகுதிகளில் உள்ள நிறுவனங்களில் மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு குறித்து ஆய்வு செய்யப்பட்டதில் கடைகளில் 60 கிலோ அளவிலான பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.20,000 அபராதம் விதிக்கப்பட்டது.

அதேபோல திருப்பூா் மாநகராட்சி முதல் மண்டலம், 25ஆவது வாா்டு, சிறு பூலுவபட்டி ரிங் ரோடு பகுதியில் ஆய்வு செய்து பொது இடத்தில் குப்பை கொட்டியவா்களுக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த ஆய்வின்போது சுகாதார ஆய்வாளா் கோகுலநாதன் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.