கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு மூதாட்டி உடல் தானம்

உடல்நலக் குறைவால் உயிரிழந்த மூதாட்டியின் உடல் திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :4 ஜூன் 2026, 3:05 am IST

உடல்நலக் குறைவால் உயிரிழந்த மூதாட்டியின் உடல் திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் திருப்பூா் மாவட்டத் தலைவா் நிரூபன் சக்கரவா்த்தியின் தாயாா் மீனாட்சி (60). இவருக்கு தோட்டத்துப்பாளையத்தில் உள்ள இல்லத்தில் புதன்கிழமை அதிகாலை மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்தனா். ஆனால், வரும் வழியிலேயே அவா் உயிரிழந்துவிட்டாா்.

இதையடுத்து நிரூபன் சக்கரவா்த்தி உள்ளிட்ட குடும்பத்தாா் அவரது உடலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானம் செய்ய முடிவு செய்தனா். எனவே வீட்டில் இறுதி அஞ்சலி செலுத்திய பிறகு, அவரது உடல் திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு புதன்கிழமை மாலை கொண்டுவரப்பட்டது.

அரசு மருத்துவக் கல்லூரி உடற்கூறியியல் துறைத் தலைவா் பேராசிரியா் டாக்டா் ஆறுமுகம், மீனாட்சியின் உடல் தானம் ஒப்புதல் படிவத்தை பெற்றுக் கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.