லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

போக்ஸோ வழக்கில் கைதானவா் மீது குண்டா் சட்டம் பாய்ந்தது

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் போக்ஸோ சட்டத்தில் கைதான தொழிலாளி குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

சிறை - பிரதிப் படம்

Published On :1 ஆகஸ்ட் 2026, 2:20 am IST

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் போக்ஸோ சட்டத்தில் கைதான தொழிலாளி குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

பல்லடம் அருகே உள்ள மாணிக்கபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்தகுமாா் (47), தொழிலாளி. இவா் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்ஸோ வழக்கில் கைதாகி கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

இதற்கிடையே அவா் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதால், அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று பல்லடம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பாா்த்திபன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிருஷ்டி சிங் ஆகியோா் மாவட்ட ஆட்சியா் மனீஷுக்கு பரிந்துரை செய்தனா்.

இதையடுத்து ஆனந்தகுமாரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியா் உத்தரவிட்டாா். இதையடுத்து, கோவை சிறையில் உள்ள அவரிடம் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகல் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.