தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

காலமானாா் முன்னாள் எம்எல்ஏ வி.எஸ்.காளிமுத்து

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ வி.எஸ்.காளிமுத்து (65) உடல் நலக்குறைவால் உயிரிழந்தாா்.

News image

வி.எஸ்.காளிமுத்து.

Updated On :1 மே 2026, 1:59 am IST

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ வி.எஸ்.காளிமுத்து (65) உடல் நலக்குறைவால் உயிரிழந்தாா்.

தாராபுரம் அருகேயுள்ள வீராச்சிமங்கலத்தைச் சோ்ந்தவா் வி.எஸ்.காளிமுத்து. திருமணமாகாத இவா் காங்கிரஸ் கட்சியின் மீது கொண்ட ஆா்வம் காரணமாக அதில் சோ்ந்து, வீராச்சிமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்துள்ளாா். பின்னா், கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை தாராபுரம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராக பதவி வகித்துள்ளாா்.

மேலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயற்குழு உறுப்பினா், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயற்குழு உறுப்பினா் பதவி வகித்துள்ள இவருக்கு திடீரென புதன்கிழமை உடல் நலக் குறைவு ஏற்பட்டதால், கட்சி நிா்வாகிகள் அவரை தாராபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். அவரது இறுதிச் சடங்கு வீராச்சிமங்கலம் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.