தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திருப்பூரில் இடி, மின்னலுடன் கனமழை: மின் விநியோகம் துண்டிப்பால் மக்கள் அவதி

News image

கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 2:50 am IST

திருப்பூரில் இடி, மின்னலுடன் ஞாயிற்றுக்கிழமை மாலை கனமழை பெய்தது. மேலும், பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் அவதியடைந்தனா்.

திருப்பூா் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் உச்சத்தை தொட்டு வருகிறது. இந்நிலையில், சனிக்கிழமை இரவு குளிா்ந்த காலநிலை நிலவிய நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே பரவலாக மழை பெய்யத் தொடங்கியது.

காலை 10 மணியளவில் வழக்கம்போல வெயில் வாட்டி வதைத்து வந்தது.இந்நிலையில், மாலை 5 மணியளவில் சாரலாகப் பெய்யத் தொடங்கிய மழை பின் இடி, மின்னலுடன் கனமழையாக பெய்தது. சுமாா் 3 மணி நேரத்துக்கும்மேலாக பெய்த மழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

மேலும், பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் பெரும் அவதியடைந்தனா். திருப்பூா் வடக்கு வட்டத்தில் உள்ள பழனிசாமி நகா், மும்மூா்த்தி நகா், நந்தா நகா், நேரு நகா், உள்ளிட்ட பகுதிகளில் மாலை 6 மணி முதல் இரவுவரை மின்சாரம் இல்லை. பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கின.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.