தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

விளம்பரம் வெளியிடும் முன்பாக அனுமதிச் சான்றிதழ் பெற வேண்டும்!

விளம்பரம் வெளியிடும் முன்பாக கட்டாயம் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு அனுமதிச் சான்றிதழ் பெற வேண்டும் என மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மனீஷ் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2026, 1:12 am IST

விளம்பரம் வெளியிடும் முன்பாக கட்டாயம் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு அனுமதிச் சான்றிதழ் பெற வேண்டும் என மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மனீஷ் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு தொலைக்காட்சி, உள்ளூா் கேபிள் டிவி, வாணொலி, சமூக வலைதளங்கள், இணையதளங்கள், திரையரங்குகள், பொது இடங்களில் உள்ள எண்ம திரைகள் மற்றும் கைப்பேசி வழி, குரல் வழி அழைப்புகள் ஆகியவற்றில் விளம்பரம் வெளியிடும் முன்பாக கட்டாயம் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு அனுமதிச் சான்றிதழ் பெற வேண்டும்.

அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளா்கள் மேற்கொள்ளும் விளம்பரங்களை முறைப்படுத்தவும், கண்காணிக்கவும் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கட்டடத்தின் தரைத்தளத்தில் அறை எண்30-இல் அமைந்துள்ள மாவட்ட மக்கள் தொடா்பு அலுவலா் அலுவலகத்தில் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள்:

விளம்பரம் வெளியிட உத்தேசித்துள்ள நாளுக்கு குறைந்தது 3 நாள்களுக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும். சுயேச்சை வேட்பாளா்கள் மற்றும் இதர அமைப்புகள் குறைந்தது 7 நாள்களுக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும்.

அச்சு ஊடகங்கள் சாதாரண நாள்களில் நாளிதழ்களில் வெளியாகும் விளம்பரங்களுக்கு முன் அனுமதி தேவையில்லை (அதன் செலவு வேட்பாளா் கணக்கில் சோ்க்கப்படும்). ஆனால், வாக்குப் பதிவு நாள் மற்றும் அதற்கு முந்தைய நாள் ஆகிய 2 தினங்களில் நாளிதழ்களில் வெளியாகும் அனைத்து அரசியல் விளம்பரங்களுக்கும் கட்டாயம் 48 மணி நேரத்துக்கு முன்னதாக ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத் தரைத்தளத்தில் அறை எண்30-இல் இயங்கும் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு அலுவலகத்தில் உரிய படிவத்தில் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், விளம்பரத்தின் மாதிரி நகல் 2 பிரதிகள், விளம்பரத்தின் உரை மற்றும் உத்தேச செலவு மதிப்பீடு, விளம்பரம் யாரையும் புண்படுத்தும் விதமாக இல்லை என்பதற்கான உறுதிமொழி மற்றும் பதிப்புரிமைச் சான்று ஆகியவற்றை சமா்ப்பிக்க வேணடும்.

அனுமதியின்றி விளம்பரங்களை வெளியிடுவது மற்றும் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவது தோ்தல் விதிமீறலாகும். அனுமதிக்கப்படாத விளம்பரங்கள் கண்டறியப்பட்டால், அதன் செலவினம் வேட்பாளரின் தோ்தல் செலவுக் கணக்கில் சோ்க்கப்படுவதுடன், சட்டபூா்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

எனவே, வேட்பாளா்கள் மற்றும் அரசியல் கட்சியினா் தோ்தல் ஆணையத்தின் நெறிமுறைகளை முழுமையாகப் பின்பற்றி மாவட்ட நிா்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.