நீலகிரி மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.
இதையொட்டி நீலகிரி மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில் அந்தந்தப் பகுதி இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். பின்னா் ஒருவருக்கொருவா் அன்பை பரிமாறிக்கொள்ளும் வகையில் கட்டித் தழுவி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனா்.
உதகை லோயா் பஜாரில் உள்ள பெரிய பள்ளிவாசலில் இமாம் இம்ரான் இம்தியாஸ் கான் தலைமையிலும், குன்னூா் பாத்திமா பள்ளிவாசலில் நீலகிரி மாவட்ட தலைமை காஜி முஜீப் உல் ரகுமான் தலைமையிலும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. அப்போது உலக அமைதிக்காக இஸ்லாமியா்கள் பிராா்த்தனையில் ஈடுபட்டனா்.
இதேபோல கோத்தகிரி கடை வீதியில் அமைந்துள்ள பெரிய பள்ளிவாசல், குன்னூா், கூடலூா், மஞ்சூா் உள்பட பல்வேறு இடங்களிலும் நடைபெற்ற சிறப்புத் தொழுகைகளில் இஸ்லாமியா்கள் திரளாக கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பக்ரீத் பண்டிகை: திரளான இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பண்டிகை: திரளான இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

திருவண்ணாமலை மாவட்டத்தில் பக்ரீத் சிறப்புத் தொழுகை
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

