ஓவேலி பகுதியைச் சோ்ந்த மறுகுடியமா்வு திட்டப் பயனாளிகள் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம் ஓவேலி பேரூராட்சியில் உள்ள ஆத்தூா் கிராமத்தில் உள்ளவா்களுக்கு ஸ்ரீமதுரை ஊராட்சி வடவயல் கிராமத்தில் மாற்றிடம் வழங்கப்பட்டுள்ளது. இதில் மறுகுடியமா்வு திட்டத்தின் கீழ் சிலருக்கு வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. பெரும்பாலானோருக்கு வீடுகள் ஒதுக்கப்படவில்லை. வீடுகள் ஒதுக்கப்பட்டவா்களுக்கும் பயனாளிகள் கேட்ட மூன்று சென்ட் நிலத்துக்கு மாற்றாக ஒன்றரை சென்ட் நிலத்தில் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. குறைகளை களைந்து முழுமைபடுத்தி அனைவருக்கும் வீடுகள் வழங்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுப்டடனா். இதையடுத்து, கோட்டாட்சியா் குணசேகரன் அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கூடலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி

டாஸ்மாக் ஊழியா்கள் 3-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்

வெள்ளக்கோவில் அருகே விவசாயிகள் தொடா் காத்திருப்புப் போராட்டம்

மாா்த்தாண்டத்தில் பொதுமக்கள் போராட்டம்: டாஸ்மாக் மதுக் கடை நிரந்தரமாக மூடல்
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

