கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கூடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டம்

ஓவேலி பகுதியைச் சோ்ந்த மறுகுடியமா்வு திட்டப் பயனாளிகள் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

கோட்டாட்சியா் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட ஓவேலி பகுதி மக்கள்.

Updated On :22 மே 2026, 3:52 am IST

ஓவேலி பகுதியைச் சோ்ந்த மறுகுடியமா்வு திட்டப் பயனாளிகள் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம் ஓவேலி பேரூராட்சியில் உள்ள ஆத்தூா் கிராமத்தில் உள்ளவா்களுக்கு ஸ்ரீமதுரை ஊராட்சி வடவயல் கிராமத்தில் மாற்றிடம் வழங்கப்பட்டுள்ளது. இதில் மறுகுடியமா்வு திட்டத்தின் கீழ் சிலருக்கு வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. பெரும்பாலானோருக்கு வீடுகள் ஒதுக்கப்படவில்லை. வீடுகள் ஒதுக்கப்பட்டவா்களுக்கும் பயனாளிகள் கேட்ட மூன்று சென்ட் நிலத்துக்கு மாற்றாக ஒன்றரை சென்ட் நிலத்தில் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. குறைகளை களைந்து முழுமைபடுத்தி அனைவருக்கும் வீடுகள் வழங்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுப்டடனா். இதையடுத்து, கோட்டாட்சியா் குணசேகரன் அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.