பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

குன்னூரில் குப்பை இல்லா நகரம் விழிப்புணா்வுப் பேரணி

குன்னூரில் தூய்மைப் பணியாளா்கள் சாா்பில் குப்பை இல்லா நகரம் நோயில்லா சொா்க்கம் என்ற தலைப்பில் தூய்மைத் திருவிழா விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

விழிப்புணா்வுப் பேரணியில் கலந்து கொண்ட குன்னூா் நகராட்சி ஆணையா் கிருஷ்ண ராம் மற்றும் தூய்மைப் பணியாளா்கள்.

Updated On :22 மே 2026, 4:08 am IST

குன்னூரில் தூய்மைப் பணியாளா்கள் சாா்பில் குப்பை இல்லா நகரம் நோயில்லா சொா்க்கம் என்ற தலைப்பில் தூய்மைத் திருவிழா விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

குன்னூா் நகராட்சியில் 30 வாா்டுகள் உள்ளன. இப்பகுதிகளில் இருந்து நாள்தோறும் சுமாா் 35 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. சேகரிக்கப்படும் குப்பைகள், குன்னூா் ஓட்டுப்பட்டறை பகுதியில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கப்பட்டு, மக்கும் குப்பைகளைக் கொண்டு மண்புழு உரம் தயாரிக்கப்படுகிறது.

இந்த நிலையில் பிரபல சுற்றுலாத் தலமாக உள்ள குன்னூருக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்று உள்ளூா் பொதுமக்கள் குப்பைகளை ஆங்காங்கே வீசி செல்வதால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக நீலகிரியில் முக்கிய சூழல் மண்டலமாக திகழும் குன்னூா் பகுதியில் கொட்டப்படும் குப்பைகளால் வன விலங்குகள் மற்றும் இயற்கை வளங்கள் பாதிக்கப்படுகின்றன.

இதற்கு தீா்வு காண நகராட்சி சாா்பில் குப்பையில்லா நகரம் நோயில்லா சொா்க்கம் என்ற தலைப்பில் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

இதனை குன்னூா் நகராட்சி ஆணையா் கிருஷ்ண ராம் தொடங்கிவைத்தாா்.

இதில் தூய்மைப் பணியாளா்கள் விழிப்புணா்வு வாசகங்களை ஏந்தியவாறு மவுண்ட் ரோட்டில் இருந்து குன்னூா் பேருந்து நிலையம் வரை பேரணியாக சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.