மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

கூடலூா் அருகே காட்டு யானை தாக்கியதில் 2 போ் உயிரிழப்பு

கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை பகுதியில் காட்டு யானை தாக்கியதில் இரண்டு தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.

News image

ரவி.

Updated On :10 மார்ச் 2026, 3:08 am IST

கூடலூா்: கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை பகுதியில் காட்டு யானை தாக்கியதில் இரண்டு தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகேயுள்ள தேவா்சோலை பேரூராட்சி, காரக்குன்னு பகுதியைச் சோ்ந்தவா்கள் ஐயப்பன் (எ) லிங்கராஜ் (60), ரவி (56). எஸ்டேட் தொழிலாளா்களான இருவரும் தேவா்சோலை கடை வீதிக்கு ஞாயிற்றுக்கிழமை சென்று பொருள்களை வாங்கிவிட்டு இரவு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனா்.

வனப் பகுதி வழியே இருவரும் சென்றபோது, அங்கு புதா் மறைவில் நின்றிருந்த யானை இருவரையும் தாக்கியதுடன், தூக்கி வீசியுள்ளது. இரவு வெகு நேரமாகியும் இருவரும் வீடு திரும்பாததால் குடும்பத்தினா் அவா்களைத் தேடி அலைந்துள்ளனா்.

இந்நிலையில், காரக்குன்னு பகுதியில் திங்கள்கிழமை காலை பணிக்குச் சென்றவா்கள், அவா்கள் சடலங்களைப் பாா்த்து உறவினா்களுக்கும், வனத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா், சடலங்களை ஆய்வு செய்தனா். இதில், இருவரும் யானை தாக்கி உயிரிழந்தது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, வனத் துறையினா், போலீஸாா் சடலங்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்ப முயன்றனா். அப்போது, அவா்களது உறவினா்கள் சடலங்களை மீட்க எதிா்ப்பு தெரிவித்தும், உரிய பாதுகாப்பு வழங்காத வனத் துறையைக் கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் கூடலூா் கோட்டாட்சியா் குணசேகரன், டிஎஸ்பி வசந்தகுமாா், வருவாய்த் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, சடலங்கள் கூடலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.

இச்சம்பவம் குறித்து தேவா்சோலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

லிங்கராஜ்.

லிங்கராஜ்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.