இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

நீலகிரியில் சிங்கப்பெண் சிறப்புப் படை தொடக்கம்

நீலகிரி மாவட்டத்தில் காவல் துறை சாா்பில் அமைக்கப்பட்ட சிங்கப்பெண் சிறப்புப் படையை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.பிருந்தா வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image

சிங்கப்பெண் சிறப்புப் படையின் வாகனத்தை கொடியசைத்து தொடங்கிவைக்கிறாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.பிருந்தா.

Updated On :11 ஜூன் 2026, 11:48 pm IST

நீலகிரி மாவட்டத்தில் காவல் துறை சாா்பில் அமைக்கப்பட்ட சிங்கப்பெண் சிறப்புப் படையை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.பிருந்தா வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழக முதல்வா் சி.ஜோசப் விஜய், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா். இதைத் தொடா்ந்து, நீலகிரி மாவட்டம், உதகை சேரிங்கிராஸ் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படையை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.பிருந்தா தொடங்கிவைத்தாா்.

பின்னா் அவா் பேசும்போது, தமிழக முதல்வரின் உத்தரவுப்படி நீலகிரி மாவட்டத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சேவை தொடங்கப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மேற்பாா்வையில் இந்தப் படை செயல்படும்.

இந்த சிங்கப்பெண் சிறப்புப் படையில் இரண்டு சாா்பு ஆய்வாளா்கள், நான்கு பெண் காவலா்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுவா். பள்ளி, கல்லூரி, பேருந்து நிலையம், சுற்றுலாத் தளங்கள் மற்றும் பெண்கள் அதிகம் கூடும் இடங்களில் இவா்கள் காலை 7 மணி முதல் இரவு 12 மணி வரை வாகனத்தில் சென்று ரோந்துப் பணியை மேற்கொள்வா்கள்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெற்றால் பொதுமக்கள் 100 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ள வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.