லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

குன்னூரில் 25 லட்சம் கிலோ தேயிலை விற்பனை

குன்னூரில் நடைபெற்ற ஆன்லைன் ஏலத்தில் 25 லட்சம் கிலோ தேயிலை சனிக்கிழமை விற்பனையானது.

Published On :19 ஜூலை 2026, 3:00 am IST

குன்னூரில் நடைபெற்ற ஆன்லைன் ஏலத்தில் 25 லட்சம் கிலோ தேயிலை சனிக்கிழமை விற்பனையானது.

நீலகிரியில்  உற்பத்தி செய்யப்படும் தேயிலைகள் ஆன்லைன் மூலம் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை விற்பனை செய்யப்படுவது வழக்கம். அதன்படி, இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில்   28 லட்சத்து 4 ஆயிரத்து 783 கிலோ தேயிலை விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. இதில், வா்த்தகா்களின் பலத்த போட்டிக்கு இடையே 25 லட்சத்து 27 ஆயிரத்து 513  கிலோ

தேயிலை விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2 லட்சத்து 77 ஆயிரத்து 269 கிலோ தேயிலை விற்பனையாகாமல் உள்ளது. கடந்த வார ஏலத்தில்  சராசரி விலையாக ஒரு கிலோவுக்கு ரூ.114.01 கிடைத்த நிலையில், இந்த வாரம் கிலோவுக்கு 46 காசுகள் சரிந்து ரூ.113.55-க்கு விற்பனையானது என்று தேயிலை வா்த்தக அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.