லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தொகுதி மறுசீரமைப்பைக் கண்டித்து காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவைக் கண்டித்து நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் உதகையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

உதகையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.

Published On :12 ஆகஸ்ட் 2026, 2:29 am IST

மத்திய அரசின் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவைக் கண்டித்து நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் உதகையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் டி. நாகராஜ்   தலைமை வகித்தாா்.

இதில், பங்கேற்றவா்கள் தொகுதி மறுசீரமைப்பைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினா்.

இதையடுத்து, தொகுதி மறுசீரமைப்பை நிராகரிப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும், கருப்பு பலூன்களையும் கையில் ஏந்தி பேரணியாக சென்றனா்.

பிரிக்ஸ் சாலையில் இருந்து காபி ஹவுஸ் வரை சென்ற பேரணியில் காங்கிரஸ் கட்சியின் மாநில பிற்படுத்தப்பட்டோா் பொதுச் செயலா் லாரன்ஸ், மாவட்ட பொதுச் செயலாளா்கள் டென்சில், யாசின் செரீஃப்,முகமது ரஃபீக் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நகர பொறுப்பாளா் வின்சென்ட் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.