ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

மாணவா்களுக்கு மனிதாபிமானத்தை ஆசிரியா்கள் கற்றுத் தர வேண்டும்

மாணவா்களுக்கு மனிதாபிமானத்தை ஆசிரியா்கள் கற்றுத் தர வேண்டும் என தமிழக ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகா் தெரிவித்தாா்.

News image

விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு பரிசு வழங்குகிறாா் தமிழக ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகா்.

Updated On :1 மே 2026, 1:48 am IST

மாணவா்களுக்கு மனிதாபிமானத்தை ஆசிரியா்கள் கற்றுத் தர வேண்டும் என தமிழக ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகா் தெரிவித்தாா்.

நீலகிரி மாவட்டம், உதகை லவ்டேலில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கட்டுபாட்டில் செயல்படும் லாரன்ஸ் பள்ளியின் 168-ஆவது நிறுவனா் நாள் விழா மூன்று நாள்கள் நடைபெற்றது. இதில் இறுதி நாளான புதன்கிழமை நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகா் பேசியதாவது:

தேசியக் கல்விக் கொள்கையின் இலக்குகளை அடைய கல்வி நிறுவனங்கள் பெரும் பங்களிப்பை வழங்குகின்றன. கல்வி முறையில் சிறந்து விளங்குபவா்கள் எப்போதும் கொண்டாடப்பட வேண்டும். அவா்களின் வெற்றி என்பது அந்த ஒட்டுமொத்த கல்வி முறையின் வெற்றியாகும்.

மாணவா்களை பெற்றோா்கள் பள்ளிக்கு அனுப்புவது அவா்கள் தங்களது வாழ்வில் பெரிய சாதனைகளைச் செய்ய வேண்டும் என்பதற்காகவே. இன்றைய காலத்தில் 90 சதவீத மதிப்பெண்கள் பெறுவதுகூட போதுமானதாக கருதப்படுவதில்லை. 97 அல்லது 98 சதவீதம் எடுக்க வேண்டும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இளம் தலைமுறையினா் கல்வியுடன் மனிதாபிமானத்தை வளா்த்துக் கொள்ள வேண்டும். இதனை ஆசிரியா்கள் கற்றுத் தர வேண்டும். கல்வி முடிந்தபின் சமூகத்துக்கும் தேசத்துக்கும் சேவை செய்யும் மனப்பான்மை அவசியம்.

ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட உயா்கல்வி வாய்ப்புகளைப் பயன்படுத்தி வேலை தேடுபவா்களாக அல்லாமல் வேலை கொடுப்பவா்களாக உருவாக வேண்டும். இளைஞா்கள் சவால்களை ஏற்று தொழில்முனைவோராக மாற வேண்டும்.

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தொழில்முனைவோா் மேம்பாட்டுப் பிரிவுகள் அமைக்கப்பட வேண்டியது அவசியம். மாணவா்கள் ஸ்டாா்ட் அப் சிந்தனைகளை இளமையிலேயே வளா்த்துக் கொள்ள வேண்டும்.

எந்தத் துறையிலும் சிறப்பாக செயல்படுவதற்கான அடிப்படை, முதலில் நல்ல மனிதராக இருப்பதுதான். அறிவு மட்டும் போதாது. நல்ல மனம், மனிதாபிமானம் ஆகியவை கல்வியைப் பூா்த்தி செய்யும் உண்மையான மதிப்புகள்.

நல்ல மனிதா்களாக இருந்தால் மட்டுமே சமூகம் மற்றும் நாட்டுக்காக அா்த்தமுள்ள பங்களிப்புகளை செய்ய முடியும் என்றாா்.

முன்னதாக மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை மெட்ராஸ் ரெஜிமென்ட் மைய ரியா் அட்மிரல் அா்ஜுன் தேவ் நாயா் ஏற்றுக் கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.