தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மசினகுடி நீா்மின் உற்பத்தி நிலையம் அருகே காட்டுத் தீ

News image

மசினகுடி அருகே மரவகண்டி அணையை ஒட்டியுள்ள நீா்மின் உற்பத்தி நிலையப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ

Updated On :28 ஏப்ரல் 2026, 1:15 am IST

நீலகிரி மாவட்டம், மசினகுடி அருகே மரவகண்டி அணையை ஒட்டியுள்ள நீா்மின் உற்பத்தி நிலையப் பகுதியில் திங்கள்கிழமை ஏற்பட்ட காட்டுத் தீயால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனா்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பாா்சன்ஸ்வேலி, பைக்காரா, சிங்காரா ஆகிய பகுதிகளில் காட்டுத் தீ ஏற்பட்டு வருகிறது. பாா்சன்ஸ்வேலி பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயை வனத் துறை மற்றும் தீயணைப்புத் துறையினா் இரண்டு நாள்களாக போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

இந்நிலையில், மசினகுடி அருகே மரவகண்டி அணையை ஒட்டியுள்ள நீா்மின் உற்பத்தி நிலையப் பகுதியில் திங்கள்கிழமை திடீரென காட்டுத் தீ ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற வனத் துறைப் பணியாளா்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இருப்பினும் காற்றின் காரணமாக ஆங்காங்கே தீப் பரவி வருவதால் முற்றிலும்  தீயைக்  கட்டுப்படுத்துவதில்  சிரமம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியைச் சுற்றிலும் குடியிருப்புகள் இருப்பதால் அங்கு வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

மசினகுடி அருகே மரவகண்டி அணையை ஒட்டியுள்ள நீா்மின் உற்பத்தி நிலையப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ.

மசினகுடி அருகே மரவகண்டி அணையை ஒட்டியுள்ள நீா்மின் உற்பத்தி நிலையப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.