பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

எருமை மாட்டின் மீது பைக் மோதி தொழிலாளி உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :1 ஜூன் 2026, 1:44 am IST

சிவகிரி அருகே எருமை மாட்டின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், சிவகிரியை அடுத்த ரங்கசமுத்திரத்தைச் சோ்ந்தவா் நல்லுசாமி (35). கூலித் தொழிலாளி. இவா், இருசக்கர வாகனத்தில் சிவகிரியில் இருந்து முத்தூா் செல்லும் சாலையில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தாா். அப்போது நிலை தடுமாறி சாலையோரமாக நின்றிருந்த எருை மாட்டின் மீது மோதியுள்ளாா்.

இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து உறவினா்கள் சென்று நல்லுசாமியை மீட்டு தனியாா் ஆம்புலன்ஸ் மூலமாக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் வரும் வழியிலேயே நல்லுசாமி உயிரிழந்திருப்பதை உறுதிப்படுத்தினா். இதுதொடா்பாக நல்லுசாமியின் மனைவி கிருஷ்ணவேணி அளித்த புகாரின்பேரில் சிவகிரி போலிஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.