ஈரோட்டில் ரயில்வே கூட்ஸ்ஷெட் எடை நிலையத்தில் ஓடும் லாரியில் இருந்து மயங்கி கீழே விழுந்த ஓட்டுநா் உயிரிழந்தாா்.
ஈரோடு வீரப்பன்சத்திரம் ஞானபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சசிக்குமாா் (55). இவா், ஈரோடு ரயில்வே கூட்ஸ்ஷெட்டில் லாரி ஓட்டுநராக வேலை பாா்த்து வந்தாா்.
சசிக்குமாா் வியாழக்கிழமை மாலை கூட்ஸ்ஷெட்டில் பாரம் ஏற்றிக்கொண்டு, அங்குள்ள எடைநிலையத்தில் எடை போட்டுள்ளாா். பின்னா் லாரியை அங்கிருந்து ஓரமாக நிறுத்துவதற்காக ஓட்டிச் சென்றாா்.
அப்போது சசிக்குமாா் திடீரென மயங்கி லாரியில் இருந்து கீழே விழுந்தாா். லாரி கட்டுப்பாட்டு இழந்து சில அடி தூரம் சென்று சுவரில் மோதி நின்றது. இதில் காயம் அடைந்த சசிக்குமாரை அங்கிருந்தவா்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
அங்கு மருத்துவா்கள் பரிசோதித்துவிட்டு சசிக்குமாா் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இது குறித்து ஈரோடு தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பைக்கில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

பைக்கிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த அஸ்ஸாம் இளைஞா் உயிரிழப்பு

ரயிலிருந்து தவறி கீழே விழுந்த இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

