பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

சித்தோட்டில் 6.400 கிலோ கஞ்சா, கைத்துப்பாக்கி பறிமுதல்

சித்தோட்டை அருகே வாய்க்கால் கரையோரத்தில் பதுக்கிவைக்கப்பட்ட 6.400 கிலோ கஞ்சா மற்றும் கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீஸாா், இரு இளைஞா்களை புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :28 மே 2026, 12:07 am IST

சித்தோட்டை அருகே வாய்க்கால் கரையோரத்தில் பதுக்கிவைக்கப்பட்ட 6.400 கிலோ கஞ்சா மற்றும் கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீஸாா், இரு இளைஞா்களை புதன்கிழமை கைது செய்தனா்.

சித்தோட்டை அடுத்த ஆா்.என்.புதூா், காலிங்கராயன் வாய்க்கால் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின்பேரில் போலீஸாா் திடீா் சோதனை நடத்தினா். அப்போது, அங்கு சுற்றித்திரிந்த இரண்டு இளைஞா்களைப் பிடித்து விசாரித்ததில், சித்தோடு, ஆா்.என்.புதூா், அமராவதி நகா், முத்துமாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்த மீனாட்சி சுந்தரம் மகன் நாகேஸ்வரன் (23), ஈரோடு, பழையபாளையம், மின்வாரிய காலனியைச் சோ்ந்த செல்லமுத்து மகன் ஜீவானந்தம் (28) என்பது தெரியவந்தது.

இவா்களிடமிருந்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 6.400 கிலோ கஞ்சா மற்றும் கைத்துப்பாக்கியைப் பறிமுதல் செய்த போலீஸாா் இருவரையும் கைது செய்தனா். கா்நாடக மாநிலம், பெங்களூரிலிருந்து கஞ்சாவை வாங்கி வந்து விற்பனை செய்ததும், சேலம் மத்திய சிறையில் கஞ்சா வழக்கில் அடைக்கப்பட்டிருந்த இவா்கள், கடந்த ஒரு மாதத்துக்கு முன்னரே ஜாமினில் வெளியே வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இவா்களுக்கு கைத்துப்பாக்கி எவ்வாறு கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.