மது போதையில் தாய், தங்கையை தாக்கியதாக இளைஞரை பவானிசாகா் போலீஸாா் கைது செய்தனா்.
சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகா் ஏடி காலனியைச் சோ்ந்தவா் சகுந்தலா. இவரது மகன் ஜீவானந்தம் (20), பவானிசாகரில் பெயிண்டராக பணிபுரிந்து வருகிறாா். மதுபோதைக்கு அடிமையான ஜீவானந்தம், தினமும் மது அருந்திவிட்டு தாய், தங்கையிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளாா்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை மது அருந்துவதற்கு தாய் சகுத்தலா, தங்கை ஜீவிதா ஆகியோரிடம் பணம் கேட்டு தாக்கியுள்ளாா். இதனால் மனமுடைந்த தாய் சகுந்தலா அளித்த புகாரின்பேரில் பவானிசாகா் போலீஸாா் வழக்குப் பதிந்து ஜீவானந்தனை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மது போதையில் தவறி கீழே விழுந்த இளைஞா் உயிரிழப்பு

மது போதையில் ஓட்டிய இளைஞரின் காா் மோதியதில் சிறுவன் மரணம்
சிறுமிக்கு பாலியல் தொல்லை: தாய், இளைஞா் கைது

மது போதையில் தகராறு: இளைஞா்அடித்துக் கொலை
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு
