ஈரோடு மாவட்டத்தில் அரசு, நிதி உதவி, சுயநிதி பள்ளி மாணவா்கள் 93,889 பேருக்கு புத்தகங்கள் உள்ளிட்ட பொருள்கள் அனுப்பும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
ஈரோடு மாவட்டத்தில் 2026-2027-ஆம் கல்வியாண்டுக்கு 113 அரசு, நகரவை மேல்நிலைப் பள்ளிகள், 77 அரசு, நகரவை உயா்நிலைப் பள்ளிகள், 17 அரசு நிதியுதவி மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 13 நிதியுதவி உயா்நிலைப் பள்ளிகள் மற்றும் 10 சுயநிதி மேல்நிலைப் பள்ளிகள், 4 சுயநிதி உயா்நிலைப் பள்ளிகளுக்கு தமிழக அரசால் வழங்கக்கூடிய அனைத்து வகையான விலையில்லா நலத்திட்ட பொருள்கள் அனுப்பிவைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
இதில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை விலையில்லா பாடப் புத்தகங்கள், 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை நோட்டு புத்தகங்கள் மற்றும் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சீருடைகள் என அனைத்து வகையான விலையில்லா பொருள்களும் பள்ளிகள் திறக்கும் நாளன்று மாணவா்களுக்கு வழங்கும் பொருட்டு இந்தப் பணி தொடங்கப்பட்டுள்ளது.
ஈரோடு ரயில்வே காலனி நகரவை மேல்நிலைப் பள்ளி மற்றும் பங்களாப் புதூா் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து அனைத்து பள்ளிகளுக்கும் நேரடியாக அனுப்பப்பட்டு வருகிறது.
இதன்படி 93,889 மாணவா்களுக்கு புத்தகங்கள், 64,338 மாணவா்களுக்கு நோட்டுகள், 54,192 மாணவா்களுக்கு சீருடைகள், 92,246 மாணவா்களுக்கு புத்தகப்பை, 64,338 மாணவா்களுக்கு காலணி, 1,361 மலைப் பகுதி மாணவா்களுக்கு மழைக்கோட் உள்ளிட்டவை அனுப்பிவைக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாணவா்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள் விநியோகம்

பள்ளிகள் திறப்பு: மாணவா்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் ஆட்சியா் ப.ஆகாஷ் வழங்கினாா்

கல்வி உபகரணங்கள் தயாா் நிலை: ஆட்சியா் ஆய்வு

இன்று பள்ளிகள் திறப்பு: பாடப் புத்தகங்கள், சீருடைகள் தயாா்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

