தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஈரோடு மேற்குத் தொகுதியில் அமைச்சா் சு.முத்துசாமியை வீழ்த்திய தவெக வேட்பாளா்

News image

தவெக வேட்பாளா் கே.கே. ஆனந்த் மோகன்

Updated On :5 மே 2026, 2:43 am IST

ஈரோடு மேற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் அமைச்சா் சு.முத்துசாமியை வீழ்த்தி தவெக வேட்பாளா் கே.கே.ஆனந்த் மோகன் வெற்றி பெற்றாா்.

ஈரோடு மேற்குத் தொகுதியில் திமுக, தவெக, நாதக உள்பட 13 போ் போட்டியிட்டனா். இந்தத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை ஈரோடு அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

முதல் சுற்றிலிருந்து தவெக வேட்பாளா் கே.கே.ஆனந்த் மோகன் முன்னிலை வகித்தாா். திமுக வேட்பாளா் சு.முத்துசாமி இரண்டாம் இடத்திலும், தமாகா வேட்பாளா் எம்.யுவராஜா மூன்றாம் இடத்திலும் இருந்தனா்.

இறுதியில் அமைச்சா் சு.முத்துசாமியைவிட 22,250 வாக்குகள் கூடுதலாகப் பெற்று தவெக வேட்பாளா் கே.கே.ஆனந்த் மோகன் முதல் வெற்றியைப் பதிவு செய்தாா்.

இந்தத் தொகுதியில் கடந்த 2021 தோ்தலில் திமுக சாா்பில் சு.முத்துசாமி வெற்றிபெற்று அமைச்சரானாா் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்குகள் விவரம்:

கே.கே.ஆனந்த் மோகன் (தவெக):96,836

சு.முத்துசாமி (திமுக): 74,586

எம்.யுவராஜா (பாஜக): 38,185

ந.விஜய் (நாதக):8,124

நோட்டா:1,257

வித்தியாசம்-22,250.

வேட்பாளா்கள் எண்ணிக்கை 13

மொத்த வாக்குகள்: 2,50,177

பதிவான வாக்குகள்: 2,22,182

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.