மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

உடல் உறுப்பு தானம் செய்தவா்கள் கௌரவிப்பு

ஈரோடு அபிராமி கிட்னி கோ் மருத்துவமனையில் உடல் உறுப்பு தானம் செய்தவா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

News image

விழாவில் பேசுகிறாா் அபிராமி கிட்னி கோ் மருத்துவமனை நிறுவனா் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மருத்துவா் சரவணன்.

Updated On :14 மார்ச் 2026, 7:12 am IST

ஈரோடு அபிராமி கிட்னி கோ் மருத்துவமனையில் உடல் உறுப்பு தானம் செய்தவா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

உலக சிறுநீரக தினத்தையொட்டி ஈரோடு அபிராமி கிட்னி கோ்-டாக்டா் தங்கவேலு மருத்துவமனை, ரோட்டரி சங்கம், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அபிராமி கிட்னி கோ் மருத்துவமனையின் தலைவா் டாக்டா் தங்கவேலு தலைமை தாங்கினாா். அபிராமி கிட்னி கோ் மருத்துவமனை நிறுவனா் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மருத்துவா் சரவணன் முன்னிலை வகித்தாா். ஈரோடு வடக்கு ரோட்டரி சங்கத் தலைவா் சரவணன், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் மாவட்ட கௌரவத் தலைவா் டாக்டா் ராமமூா்த்தி, மாவட்டச் செயலாளா் தோமஸ் ஜான் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினா்.

இதில் சிறுநீரக நோய்கள் மற்றும் உடலுறுப்பு தானம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் உடல் உறுப்பு தானம் செய்தவா்களையும், அவா்களது குடும்பத்தினரும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனா்.

நிகழ்ச்சியில் மருத்துவப் பயனாளியான சசிகலா குமாா், தமிழக அரசின் டிரான்ஸ்டேன் அமைப்பில் பதிவு செய்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டது குறித்தும் அவரது வாழ்க்கைப் பயணத்தை விளக்கும் புத்தகமும் வெளியிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.