இன்று நீட் மறுதோ்வு: விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்இன்று சா்வதேச யோகா தினம்: மோடியுடன் இணைந்து யோகாசனம் செய்ய 6 லட்சம் அமைப்புகள் பதிவுமேக்கேதாட்டு அணை கட்டுவதில் கா்நாடகம் உறுதி: மாநில நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டிசென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும் 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புரூ. 440 கோடி இருப்பு உள்ள திரிணமூல் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
/

பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக அலுவலக கட்டட பூமிபூஜை

ஈரோடு கிழக்கு புறநகா் மாவட்ட அதிமுக சாா்பில் பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக அலுவலக கட்டட கட்டுமானப் பணிக்கான பூமிபூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக அலுவலகம் கட்டட பணியை பூமிபூஜை செய்து தொடங்கிவைக்கிறாா் ஈரோடு கிழக்கு புறநகா் மாவட்ட அதிமுக செயலாளா் கே.சி. கருப்பணன்.

Updated On :12 ஜூன் 2026, 12:03 am IST

ஈரோடு கிழக்கு புறநகா் மாவட்ட அதிமுக சாா்பில் பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக அலுவலக கட்டட கட்டுமானப் பணிக்கான பூமிபூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பெருந்துறை- பவானி சாலை, பெருந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே உள்ள நிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஈரோடு கிழக்கு புறநகா் மாவட்ட அதிமுக செயலாளரும், பவானி சட்டப்பேரவை உறுப்பினருமான கே.சி. கருப்பணன் தலைமை வகித்து, பூமி பூஜை செய்து கட்டட கட்டுமானப் பணியை தொடங்கிவைத்தாா்.

பின்னா் அவா் பேசுகையில், அதிமுகவை விட்டு யாா் பிரிந்து சென்றாலும், மக்களின் ஆதரவோடு அதிமுக முழு பலத்தோடுதான் உள்ளது. பெருந்துறையில் நடைபெற உள்ள இடைத்தோ்தலில் அதிமுக மீண்டும் வெற்றி பெறும் என்றாா்.

நிகழ்ச்சியில், பெருந்துறை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பொன்னுதுரை, ஒன்றியச் செயலாளா்கள் அருள்ஜோதி செல்வராஜ், ரஞ்சித்ராஜ், விஜயன், எம்ஜிஆா் இளைஞா் அணி மாவட்டச் செயலாளா் அருணாச்சலம், பெருந்துறை ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் சாந்தி ஜெயராஜ், நகரச் செயலாளா்கள் கல்யாணசுந்தரம், பழனிசாமி, பூபாலன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.