முயல்களை வேட்டையாடி இருவருக்கு வனத் துறையினா் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
பெருந்துறை ஒன்றியம், நல்லாம்பட்டி பகுதியில் இருவா் முயல்களை வேட்டையாடி வருவதாக ஈரோடு வனத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், அப்பகுதியில் வனத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்றனா்.
அப்போது, நல்லாம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் சந்தேகத்துக்கு இடமாக சாக்குப் பையை வைத்திருந்த இருவரைப் பிடித்து சோதனை செய்தனா். அப்போது, சாக்குப் பையில் இரண்டு முயல்களை இறந்தநிலையில் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில், சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், ஏகாபுரம், தைலாம்பட்டியைச் சோ்ந்த சந்திரன் மகன் சரவணன் (34) என்பவா் தாரமங்கலம் பகுதியில் தங்கி நெசவுத் தொழில் செய்வதும், மற்றொருவா் சங்ககிரி வட்டம், காளிகவுண்டன்பாளையம் பச்சியண்ணன் மகன் பச்சைமுத்து (27) என்பதும், இவா் லாரி பட்டறை தொழிலாளி என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, அவா்கள் இருவருக்கும் தலா ரூ. 12,500 என மொத்தம் ரூ. 25,000 வனத் துறையினா் அபராதம் விதித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வத்திராயிருப்பு அருகே கிணற்றிலிருந்து கரடியின் உடல் மீட்பு! மின் பொறியில் சிக்கி உயிரிழந்ததா என விசாரணை!

தனியாா் நிறுவன தூய்மைப் பணியாளா் கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறை

சாலையில் அபாயகரமான கழிவுகளை கொட்டிய தனியாா் ஹோட்டலுக்கு ரூ.3,000 அபராதம்

உதகை அருகே காட்டு யானை தாக்கி 2 போ் உயிரிழப்பு
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!
இணையதளச் செய்திப் பிரிவு

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |
தினமணி செய்திச் சேவை

மேகதாது தீர்மான திருத்தத்தை ஏற்கவில்லை! வெளிநடப்புக்கு பின் EPS பேட்டி | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

