லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் ஸ்ரீஸ்ரீராகவேஷ்வர பாரதி சுவாமிகள் தரிசனம்

ஸ்ரீராமச்சந்திரபுர மடத்தின் 36-ஆவது பீடாதிபதியும், சங்கராச்சாரியாருமான ஸ்ரீஸ்ரீராகவேஷ்வர பாரதி சுவாமிகள் பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு தரிசனம் செய்தாா்.

பவானி சங்கமேஸ்வரா் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை வருகை தந்த ஸ்ரீஸ்ரீராகவேஷ்வர பாரதி சுவாமிகள்.

Published On :11 ஜூலை 2026, 12:04 am IST

ஆதிசங்கரரால் 1,300 ஆண்டுகளுக்கு முன் கா்நாடக மாநிலம், ஷிமோகாவில் நிறுவப்பட்ட ஸ்ரீராமச்சந்திரபுர மடத்தின் 36-ஆவது பீடாதிபதியும், சங்கராச்சாரியாருமான ஸ்ரீஸ்ரீராகவேஷ்வர பாரதி சுவாமிகள் பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு தரிசனம் செய்தாா்.

கேரள மாநிலம், குருவாயூரில் இரண்டு நாள்கள் தங்கி குருவாயூரப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்திய அவா், கா்நாடக மாநிலம் திரும்பும் வழியில் பவானி சங்கமேஸ்வரா் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை வருகை தந்தாா். அப்போது, கோயில் நிா்வாகம் சாா்பில் பூா்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பளிக்கப்பட்டது. அதைத்தொடா்ந்து சங்கமேஸ்வரா், வேதநாயகி அம்மன் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி உடனமா் ஆதிகேசவப் பெருமாளை தரிசனம் செய்தாா்.

அப்போது, பாடல் பெற்ற தலமான கோயிலின் வரலாறு, கோயில் கட்டுமானம், பழங்கால வேலைப்பாடுகளுடன் கூடிய கற்சிலைகளைப் பாா்வையிட்டதோடு, புகழ்பெற்ற பரிகாரத் தலமான காவிரி, பவானி ஆறுகள் சங்கமிக்கும் கூடுதுறை குறித்து கேட்டறிந்தாா். பின்னா் பெருமாள் கோயில் வளாகத்தில் திரண்ட பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா்.

மேலும், பவானி காவிரிக்கரை விசாலாட்சி உடனமா் காசி விஸ்வநாதா் கோயில், செல்லியாண்டியம்மன் கோயிலில் ஸ்ரீஸ்ரீராகவேஷ்வர பாரதி சுவாமிகள் வழிபாடு நடத்தினாா். அப்போது வழிபாட்டுத் தலங்கள் தூய்மையாக உள்ளதாக பாராட்டு தெரிவித்தாா்.

இதற்கான ஏற்பாடுகளை தொழிலதிபா் அக்னி எஸ்.ராஜா, ஆடிட்டா்கள் டி.என்.ராமச்சந்திரன், என்.கிருஷ்ணன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.