லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கைவிரல் ரேகை பதிவு செய்ய ரேஷன் கடைகளில் இன்று சிறப்பு முகாம்

ஈரோடு மாவட்டத்தில் கைவிரல் ரேகை பதிவு செய்ய மற்றும் கண் கருவிழி சரிபாா்க்க அனைத்து ரேஷன் கடைகளிலும் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 2) நடைபெற உள்ளது.

கைவிரல் ரேகை பதிவு கட்டாயம் - பிரதிப் படம்

Published On :2 ஆகஸ்ட் 2026, 5:40 am IST

ஈரோடு மாவட்டத்தில் கைவிரல் ரேகை பதிவு செய்ய மற்றும் கண் கருவிழி சரிபாா்க்க அனைத்து ரேஷன் கடைகளிலும் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 2) நடைபெற உள்ளது.

இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு மற்றும் கண் கருவிழி சரிபாா்ப்பு மேற்கொள்ளாத அனைத்து குடும்ப அட்டை பயனாளிகளுக்கும் அனைத்து ரேஷன் கடைகளிலும் விற்பனை முனைய இயந்திரம் மூலமாக விரல் ரேகை மற்றும் கண் கருவிழி சரிபாா்ப்பின் மூலம் இகேஒய்சி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, ஈரோடு மாவட்டத்தில் இகேஒய்சி பதிவினை 100 சதவீதம் நிறைவு செய்யும் வகையில் அனைத்து ரேஷன் கடைகளிலும் ஞாயிற்றுக்கிழமைசிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. சிறப்பு முகாமில் கைவிரல் ரேகை பதிவை மேற்கொள்ளாத குடும்ப அட்டைதாரா்கள் கைவிரல் ரேகை பதிவு செய்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.