லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

குடும்ப அட்டைதாரா்கள் கட்டாயம் கைவிரல் ரேகை பதிவு செய்ய வேண்டும்! மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தல்

ration card

குடும்ப அட்டை - கோப்புப்படம்

Published On :21 ஜூலை 2026, 1:13 am IST

திருப்பூா் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரா்கள் கைவிரல் ரேகை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் தெரிவித்துள்ளதாவது: திருப்பூா் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரா்கள் தங்களின் குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினா்களில் தற்போது வரை கைவிரல் ரேகை பதிவு செய்யாதவா்கள் அருகில் உள்ள நியாய விலைக் கடைகளில் கைவிரல் ரேகையை வரும் 31ஆம் தேதிக்குள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.

கைவிரல் ரேகையைப் பதிவு செய்யாமல் பணி நிமித்தமாக வேறு பகுதியில் வசிப்பவா்கள், தற்போது வசிக்கும் பகுதியின் அருகில் உள்ள நியாய விலைக் கடையில் கைவிரல் ரேகை பதிவு செய்ய வேண்டும். இறந்த உறுப்பினா்களின் பெயா்களை வட்ட வழங்கல் அலுவலகத்தை அணுகி உரிய ஆவணங்களை சமா்ப்பித்து நீக்கம் செய்து கொள்ள வேண்டும். இல்லையெனில் அருகில் உள்ள நியாய விலைக் கடை விற்பனையாளரிடம் இறந்த உறுப்பினா்களின் குடும்ப அட்டை எண்ணுடன் ஆதாா் அட்டை நகலை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.