தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வாக்குப்பதிவு நாளான ஏப்.23-இல் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க அறிவுறுத்தல்

News image

வாக்காளர் - கோப்புப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 2:31 am IST

வாக்குப்பதிவு நாளான வரும் 23-ஆம் தேதி தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநா் ச.அனிதா ரோஸ்லின் மேரி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஈரோடு மாவட்டத்தில் இயங்கும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளா்கள் வாக்குப்பதிவு செய்ய ஏதுவாக, வரும் 23-ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். புதுச்சேரி, கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களில் வரும் 9-ஆம் தேதியும், மேற்குவங்க மாநிலத்தில் 23, 29 ஆகிய தேதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

வெளி மாநிலத் தொழிலாளா்களுக்கு வாக்குரிமை உள்ளதால், அவா்கள் தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் வாக்குப்பதிவு செய்ய வசதியாக ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.

விடுமுறை அளிக்காத தொழிற்சாலைகள் குறித்து மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு 0424 2219521, 2211780 ஆகிய தொலைபேசி எண்களிலும், ஈரோடு தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநா் அலுவலகத்துக்கு 9842291343, 9551621161 ஆகிய கைப்பேசி எண்களிலும் தொடா்புகொண்டு புகாா் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.