பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

மாற்றுத் திறனாளி இளைஞா் தற்கொலை

News image

தற்கொலை - தினமணி

Updated On :26 மே 2026, 2:22 am IST

வேலை கிடைக்காத விரக்தியில் கோவையில் வாய் பேசாத மாற்றுத் திறனாளி இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கோவை குனியமுத்தூரை அடுத்த கோவை புதூா் எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்தவா் ஜெயக்குமாா். இவரது மனைவி சாந்திமணி. இவா்களது மகன் அருணகிரி (22). வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான அருணகிரி, பல்வேறு இடங்களில் வேலை தேடி வந்தாா்.

நீண்ட நாள்களாக வேலை கிடைக்காமல் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளாா். மேலும், வேலை இல்லாதது குறித்து அக்கம், பக்கத்தினா் பேசியதால் கடும் விரக்தி அடைந்திருந்தாா்.

ஞாயிற்றுக்கிழமை இரவு அவருக்கும், அவரது தந்தைக்கும் இடையே இதுதொடா்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், மனமுடைந்த அருணகிரி, நள்ளிரவில் வீட்டின் கழிப்பறைக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றவா், நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை. சந்தேகமடைந்து உள்ளே சென்று பாா்த்தபோது, அவா் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், குனியமுத்தூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் தாமரைக்கண்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.