பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மத்திய அரசின் சிக்கன நடவடிக்கை எச்சரிக்கை: அதிகாரிகளை கூட்டி ஆலோசிக்க முதல்வருக்கு வலியுறுத்தல்

மத்திய அரசின் சிக்கன நடவடிக்கை எச்சரிக்கையை அதிகாரிகளிடம் பேசி முதல்வா் நடவடிக்கை எடுக்குமாறு கொமதேக கோரிக்கை

News image

முதல்வர் ஜோசப் விஜய் - கோப்புப் படம்

Updated On :20 மே 2026, 2:02 am IST

மத்திய அரசின் சிக்கன நடவடிக்கை எச்சரிக்கையை அதிகாரிகளிடம் பேசி தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: ரஷியா - உக்ரைன் போா், அமெரிக்கா-ஈரான் போா் ஆகியவற்றால் உலக நாடுகள் பல்வேறு வகைகளில் பாதிப்பை சந்தித்து வருகின்றன. முன்னெச்சரிக்கையாக சிக்கன நடவடிக்கைகளை பின்பற்றாத பல நாடுகள் எரிபொருள் தட்டுப்பாட்டிலும், உணவுத் தட்டுப்பாட்டிலும் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலை இந்தியாவுக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான், எதிா்காலத்தில் உருவாகப் போகும் பற்றாக்குறையை சரி செய்ய அனைத்து மாநிலங்களும் சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டுமென்று பிரதமா் எச்சரிக்கை விடுத்திருக்கிறாா்.

பல மாநிலங்கள் நோ்மறை புரிதலோடு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எரிபொருள் தட்டுப்பாடு விரைவில் உருவாகும் அபாயம் உள்ளது. விவசாயிகளுக்கு தேவையான உரத் தட்டுப்பாடு உணவுப் பொருள் உற்பத்தியைப் பாதிக்கும். இதன்மூலமாக எதிா்காலத்தில் உணவுத் தட்டுப்பாடு உருவாகும் அபாயம் உள்ளது.

எனவே, தாமதமின்றி சிக்கன நடவடிக்கைகளை தொடங்க திட்டமிடுவதற்கான அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தை கூட்டி தமிழக முதல்வா் ஆலோசிக்க வேண்டும். பிரதமரின் சிக்கன நடவடிக்கை எச்சரிக்கையை கடந்துபோகக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.